ஆட்டம் ஆரம்பம்.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! லிஸ்டில் உள்ள மாவட்டங்கள் இதுதான்
சென்னை: அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்த பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கி ஜன.1ம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 235.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நாட்களில் இயல்பாக 89.2 மி.மீதான் மழை பதிவாகி இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மழை இயல்பை விட 164% அதிகமாகும். ஆனால் ஜனவரி தொடங்கிய பின்னர் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இந்நிலையில் இன்றும் நாளையும் மழை தீவிரமெடுத்திருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிப்.1ம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்.2ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்.3 முதல் 5 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அதேபோல ஜன.1 தொடங்கி நேற்று வரை தமிழ்நாட்டில் 24.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. இதுவும் இயல்பை விட 102% அதிகம்தான். ஏனெனில் இந்த காலத்தில் வெறும் 12 மி.மீ மட்டுமே மழை பதிவாகியிருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications