சென்னையில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த வானிலை.. வெளுத்து எடுத்த கனமழை! ஜில்லென மாறிய கிளைமேட்
சென்னை: சென்னையில் திடீரென இன்று இரவு காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. பகல் முழுக்க வெயில் வெளுத்து எடுத்த நிலையில், இன்று இரவு திடீரென கிளைமேட் மாறி மழை வெளுத்து வாங்கியுள்ளது. அமைந்தகரை, கோயம்பேடு, பூந்தமல்லி என சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மே மாதத்தில் வெயிலின் தாக்கம் வழக்கமாக அதிகமாக இருக்கும். ஆனால், மே மாதத்தில் இடையிடையே சில நாட்கள் மழை பெய்தது. இதனால் கிளைமேட் மாறி மாறி இருந்தது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் தெரியாத அளவுக்கே வானிலை நிலவியது.

மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை இருந்தது. ஆனால் ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்தது. பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தது. குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. காலை 8 மணிக்கெல்லாம் வெயில் தனது கோர முகத்தை காட்டியது.
நண்பகல் வேளையில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், இன்று இரவு 7 மணியளவில் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டியது. சென்னை எழும்பூர், அமைந்தகரை, கோயம்பேடு, பூந்தமல்லி என சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications