மனசே பதறுது.. 56 அடி பள்ளத்தில் 80 மணி நேரமாக தவிக்கும் உயிர்கள்.. என்னதான் நடக்கிறது வேளச்சேரியில்?
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய மழை வெள்ளம் காரணமாக வேளச்சேரியில் கட்டுமான பணிக்காக தோண்டிய 56 அடி பள்ளத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 4 நாட்களாக சிக்கித் தவித்து வருகின்றனர்.
சென்னை வெள்ளத்தால் மாநகர மக்கள் முழுவதும் திக்குமுக்காடி உயிரை காக்கவும், உணவுக்கும், குடிநீருக்கும் அலைமோதிக்கொண்டு இருக்கும் வேளையில், சென்னை வேளச்சேரியில் 56 அடி பள்ளத்தில் சிக்கி சில உயிர்கள் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றன. வேளச்சேரி ஐந்து பரலாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கு அருகே அடுக்குமாடி கட்டிட கட்டுமானப் பணியின்போது திடீரென 56 அடியில் பள்ளம் விழுந்தது. கட்டுமானப் பணி நடைபெற்று வந்த அடுக்குமாடிக் கட்டிடமும் பள்ளத்தில் சரிந்தது.

விபத்து நடந்தது எப்படி?: 56 அடியில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றபோது மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வெள்ளம் வந்ததால் அதன் அருகே கட்டிடம் சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ராட்சத பள்ளத்தில், பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும் சில தொழிலாளர்கள் பள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை 2 முதல் 7 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. சரியாக எத்தனை தொழிலாளர்கள் என்பது உறுதிபடுத்தப்படவில்லை.
விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பரபரப்பான சாலையில் பச்சை நிற திரை அமைத்து மீட்புப் படையினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மீட்பு பணி என்ன நிலையில் உள்ளது என்ற தெளிவான விபரம் கிடைக்கவில்லை. மோசமான வானிலை, வெள்ளம் காரணமாக மீட்புப் பணியில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன. தீயணைப்பு படையினர், மீட்புப் படையினர் 4 வது நாளாக மீட்புப் பணி மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளத்தில் நிரம்பி இருந்த தண்ணீரை பம்புகள் மூலம் வெளியேற்றி அவர்களை மற்றொரு பள்ளம் தோண்டி மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மீட்பு பணியில் தடங்கல்: பள்ளத்தில் நீரை வெளியேற்றினாலும் அங்கு ஊற்றுபோல் நீர் நிரம்பிவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. 80 மணி நேரத்துக்கும் மேலாகியும் தொழிலாளர்கள் மீட்கப்படாத நிலையில் அவர்களின் உடல் நிலை குறித்த கவலை எழுந்து இருக்கிறது. பள்ளத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்கள் கடந்த இத்தனை நாட்களாக உணவு, குடிநீர் இன்றி எப்படி சமாளிக்கிறார்கள்? என்ன நிலையில் உள்ளார்கள்? சுவாசிப்பதற்கு வழி இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
பள்ளத்தில் சிக்கி இருப்பவர்களின் உறவினர்கள் அங்கு திரண்டு கதறி அழும் காட்சிகள் காண்போரின் காதுகளை கிழித்து கலங்க வைத்து வருகின்றன. சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டமும் அதிகரிப்பதால் போலீசார் அவர்களை பள்ளத்துக்கு அருகே செல்ல விடாமல் தடுத்து வருகிறார்கள்.
துர்நாற்றம்: இதற்கிடையே தொழிலாளர்கள் சிக்கிய பள்ளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் செய்திகள் வெளியாகி குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவுக்கும் பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏன் திரை?: உள்ளே நடக்கும் மீட்பு பணிகளை கேமராவில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு சுற்றிலும் பச்சை நிற திரை போடப்பட்டுள்ளதால் உள்ளே நடப்பது உலகிற்கு தெரியவில்லை. ஆனால், மீட்பு பணியின்போது திடீரென பக்கவாட்டு மணல் சரியக்கூடும் என்பதால் இப்படி வலை மாதிரி திரை போட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications