ரெட் அலர்ட்.. தமிழகத்தில் விடாது வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
சென்னை: அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழ்நாட்டில் இன்று சென்னை, மதுரை உள்ளிட்ட 9மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழகத்தில் போதுமான அளவுக்கு பெய்திருந்தது. ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழை பெய்யும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை தாராளம் காட்டியிருக்கிறது. இது எதிர்பார்த்ததைவிட அதிகம் இல்லை என்றாலும், இதுவே போதுமானதுதான்.

மாவட்ட அளவில் பார்த்தால் திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம் இவை மூன்றும் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் 20% முதல் 59% வரை அதிகமாக மழை பெய்திருக்கிறது.
ஆனால் திருப்பூர், மயிலாடுதுறை, நாகை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் 20% முதல் 59% வரை மழை குறைந்திருக்கிறது. ஏற்கெனவே கர்நாடகா தண்ணீரை கொடுக்காததால் டெல்டா மாவட்டங்கள் ஏமாற்றமடைந்தன. இப்படி இருக்கும்போது பருவமழையும் காலை வாரியிருப்பது விவசாயிகளை புலம்ப செய்திருக்கிறது.

சரி தென்மேற்கு பருவமழைதான் சரியில்லை, வடகிழக்காவது வாழவைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் போதுமானதாக இல்லை. டெல்டா தவிர மற்ற இடங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஓரளவு இருக்கிறது. இனிதான் மழை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இன்று கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் என 6 மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா, கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மதுரை என 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் மழை தீவிரமாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications