குற்றால அருவிகளில் சென்சார் கருவி! சென்னை ஐஐடி குழுவினர் அசத்தல்! எங்கே பொருத்தப்படுகிறது?
சென்னை: தென்காசி மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில் குற்றால அருவிகளில் சென்சார் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மழை காலங்களில் இந்த குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தும் கொட்டும்.

இதனால் சுற்றுலா பயணிகளின் கோடை சாய்ஸில் குற்றாலம் எப்போதும் இருக்கும். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி எடுத்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக வந்து ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களாக நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீரானது , வெள்ளியை உருக்கியது போல் வந்து விழுகிறது. இந்த நிலையில் நேற்று தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் புதிய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழைய குற்றால அருவியில் திடீரென அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நெல்லையை சேர்ந்த 17 வயசு சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து குற்றால அருவிகளில் மறுஅறிவிப்பு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவி, பிரதான அருவி, ஐந்தருவியில் ஐந்தருவி மட்டும் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நீர் வரத்து கண்காணிப்பு, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பிரதான அருவி, பழைய அருவி ஆகிய இரு அருவிகளையும் வனத்துறையினர் வசம் ஒப்படைக்க மாவட்டம் நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பொதுப் பணித் துறை , மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு அருவிகளும் அடுத்த இரு தினங்களுக்குள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த நிலையில் குற்றால அருவிகளில் திடீர் காட்டாற்று வெள்ளத்தை கண்காணிக்க சென்சார்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதற்கான பணிகள் விரைவில் நடைபெறவுள்ளது.
சென்சார் அமைப்பதற்காக சென்னை ஐஐடி பேராசிரியர் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருவி பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த குழு தயாரித்த சென்சார் கருவிகளை அருவிகளின் மேற்பகுதிகளில் பொருத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளம், கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இந்த சென்சார் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications