முன்கூட்டி இன்றே தொடங்கியது தென்மேற்கு பருவமழை! ஹை அலர்ட்டில் கேரளம், தென் தமிழகம்
டெல்லி: தெற்கு அந்தமான் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட எக்ஸ் வலை தள பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக் கடல், குமரி கடல், நிகோபார் தீவுகள், தெற்கு அந்தமான், மாலத்தீவு கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கடல் பகுதியில் மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் பலம் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அந்தமான நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்தது. மேக மூட்டமும் அதிக அளவில் இருக்கின்றன. கடல் மட்டத்திற்கு மேல் தென்மேற்கு திசை காற்று 4.5 கி.மீ. உயரத்திற்கு வீசுகிறது. இந்த காரணிகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது மாலத்தீவுகள், குமரி கடல், தெற்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்றைய தினம் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது.
தென் மேற்கு பருவமழை வரும் 31 ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டது. இதையடுத்து இன்று தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் 36 மணி நேரத்தில் தொடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்திய வானிலை மையத்தின் கணிப்பின்படி தற்போது பருவமழை தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே தமிழகம் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்தது. பல்வேறு இடங்களில் 100 டிகிரியை கடந்த வெயில் சுட்டெரித்தது. வெப்ப அலைகள் குறைந்து ஒரு சில பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.
தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையே தென் மேற்கு பருவமழையின் தொடக்கம்தான் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தென் மேற்கு பருவமழை வரும் மே 31 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த முறை ஒரு நாளைக்கு முன்னதாக மே 31 ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்திருந்தது. இந்த பருவமழை இந்தியாவில் விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இந்த பருவமழை பெய்யும்.
தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று ஜூன் மாதத்தில் கேரளாவுக்கு மழையாக வரும். இது செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இது முடிந்தவுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பை விட அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தென் மேற்கு பருவழை 4 நாட்கள் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளையே தென் மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது 36 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
1000 கிமீ நீண்ட மழை மேகங்கள்.. கொட்டி தீர்க்குதே கனமழை.. இப்படி ஒன்று நடந்ததே இல்லை போல -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications