Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டியாகிறதா சென்னை? குட்டி காஷ்மீராகும் தமிழ்நாடு.. வந்துருச்சு நியூஸ்.. வானிலையில் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையே குளுகுளுன்னு மாற போகிறதாம்.. பிப்ரவரி 13, 14ல் தென் தமிழகத்துக்கு நல்ல மழை பெய்ய போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்றைய தினம் சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 12-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

Super Changes in Chennai like Ooty and possibility of rain in tamil nadu in the next 4 days

அந்த அறிவிப்பில், "10ம் தேதி மற்றும் 11ம் தேதியன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தென்தமிழகம்: 11, 12ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 13 மற்றும் 14ம் தேதிகளில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 15ம் தேதி தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பனிமூட்டம்: இந்நிலையில், தமிழகத்துக்கு மேலும் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் நாளை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்னொரு செய்திக்குறிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில், "10.02.2024 மற்றும் 11.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

12.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.13.02.2024 மற்றும் 14.02.2024: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

15.02.2024 மற்றும் 16.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+