கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் தொடங்கி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வரை, மழை பெய்திருக்கிறது. இந்நிலையில், இன்றுடன் மழை குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக, சேலம், தஞ்சாவூர், நாமக்கல், திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்திருக்கிறது. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தின் ஆனங்கூர் பகுதியில் 75.60 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருப்பதாவது, "தமிழகம் முழுவதும் இன்று முதல் மழை குறையும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,
21-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
22-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
23-03-2026 முதல் 26-03-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில், இன்று (20-03-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில
பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (21-03-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.











Click it and Unblock the Notifications