வட சென்னையை சுத்துப்போட்ட மேகங்கள்.. இடி, மின்னலுடன் வெளுக்கும் மழை! வெதர்மேன் விளக்கம்
சென்னை: டிட்வா புயல் வலுவிழந்து சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்திருக்கிறது. இருப்பினும் சென்னைக்கு தீவிரமான மழையை கொடுத்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "கனமழையை கொண்டு வரும் மேக கூட்டங்கள் வட சென்னை, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் மற்றும் புழல் பகுதிகளில் மாட்டிக் கொண்டிருக்கிறது. எனவேதான் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. மேகங்கள் மிகவும் அடர்த்தியானதாகவும், தீவிரமானதாகவும் இருக்கின்றன. இதுவும் கனமழைக்கான காரணம்.

ஏற்கெனவே வடசென்னையில் அதிக அளவில் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. 100 மி.மீக்கும் அதிகமான அளவில் மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் காலை 8.30 மணிக்கு மேல் 150 மி.மீக்கும் அதிகமான அளவில் மழை கொட்டும். மறுபுறம் தென் சென்னையில் மழையின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. கனமழை காரணமாக புழல் ஏரியில் நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. எனவே ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications