வெப்பம் இன்னும் அதிகரிக்குமாம்..வானிலை அறிக்கையே இவ்வளவு வறட்சியா இருக்கே! கோடைக்கு முன்பே கொதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரித்து அசௌகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கோடைக்கு இணையாக வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட கோடை மழை எப்போது பெய்யும் என மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். அதில் மழை என்ற வார்த்தையே இல்லை. முழுக்க முழுக்க வறண்ட வானிலை, வெப்பம் தொடர்பான தகவல்களே இடம்பெற்று உள்ளன.

இன்று வெளியாகி இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, “மார்ச் 13 ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
அதிகபட்ச வெப்ப நிலை பற்றிய முன்னறிவிப்பு: மார்ச் 13 ஆம் தேதி மற்றும் மார்ச் 14 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். மார்ச் 13 ஆம் தேதி முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை: அதிக வெப்ப நிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 34 - 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை 25 - 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications