ஆரஞ்சு அலர்ட்.. கேரளாவில் கொட்டப்போகும் மிக கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்று எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை தென் மாநிலங்களில் தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. குறிப்பாக கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. அதேபோல கேரளாவில் மழை பொய்த்து போனதால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. எனவே மின்சார உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஓரளவு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

The Meteorological Department has issued an orange alert for Kerala

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்திருக்கிறது. தலைநகர் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை (மஞ்சள் அலர்ட்) பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பிருப்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்ய வேண்டும் என கேரள மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+