ஆரஞ்சு அலர்ட்.. கேரளாவில் கொட்டப்போகும் மிக கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்று எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தென்மேற்கு பருவமழை தென் மாநிலங்களில் தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. குறிப்பாக கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. அதேபோல கேரளாவில் மழை பொய்த்து போனதால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. எனவே மின்சார உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஓரளவு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்திருக்கிறது. தலைநகர் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை (மஞ்சள் அலர்ட்) பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பிருப்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்ய வேண்டும் என கேரள மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
-
மறந்தும் நீங்களாக ஆஸ்பிரின், பாராசிட்டமால் சாப்பிட வேண்டாம்.. திருப்பத்தூர் கலெக்டர் வார்னிங் -
என்னங்க சொல்றீங்க.. திடீர் சென்னை, பெங்களூர் ஆலங்கட்டி மழைக்கு காரணம்.. பில் கேட்ஸ்ஸா? மாஸ்டர்மைண்ட் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications