தூத்துக்குடியே மிதக்குது! எல்லையை கூட நெருங்க முடியலை! இதில் டோல்கேட் வசூல் வேற.. மக்கள் வேதனை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை வெள்ள பேரிடர் காலத்திலும் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதலே மழை பெய்து வருகிறது. இதனால் தென் தமிழகமான குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பல இடங்களில் நீர்த் தேக்கங்கள், கன்மாய்கள், கால்வாய்கள் உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அது போல் விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் குமரியில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சியானது இன்று விலகி அரபிக் கடல் பக்கம் சென்றுவிட்டது.
இதனால் இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை குறைந்தது. ஆனாலும் வெள்ளம் வடிந்த பாடில்லை என்கிறார்கள். இதனால் உணவு, பால், குடிநீர் இல்லாத நிலை இருக்கிறது. பலருக்கு உடைகளை கூட எடுத்து வர முடியாமல் தவித்து வருகிறார்கள். தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் வரும் ஓரிரு வாகனங்கள் சென்றாலும் தூத்துக்குடி விமான நிலையம் அருகே உள்ள டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடிக்குள்ளே வாகனங்கள் போக முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கும் போது டோல்கேட் வழியாக வரும் ஓரிரு வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் வரும் ஓரிரு வாகனங்கங்கள் சென்றாலும் தூத்துக்குடி விமான நிலையம் அருகே உள்ள டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடிக்குள்ளே வாகனங்கள் போக முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கும் போது டோல்கேட் வழியாக வரும் ஓரிரு வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications