Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்திலேயே இப்படி ஒரு கிளைமேட்டா.. ஜீரோ டிகிரியில் வெப்பம்.. இது சரியில்லையே.. நிபுணர்கள் கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி மாவடத்தில் வழக்கதிற்கு மாறாக கடுமையான குளிர் நிலவுகிறது. உறைபனி அளவுக்கு வெப்ப நிலை சென்று இருப்பதால் மக்கள் பல்வேறு உடல் நல பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறான அளவுக்கு கடுமையான குளிர் நிலவுகிறது. அந்த மாவட்டத்தின் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் எப்போதும் கடுமையான குளிர் நிலவும். இருந்தாலும் நடப்பு ஆண்டு வழக்கத்திற்கு மாறாக உறைபனி அளவுக்கு வெப்ப நிலை நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் சில இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

 Unusual Climatic phenomenon Nilgiri district locals struggle with health issues

கடும் பனிமூட்டத்துடன் வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். பசுமையான புல்வெளிகளிலும் எங்கும் வெண்மையாக காட்சி அளிக்கிறது. சில மீட்டர்கள் தொலைவு மட்டுமே காலை வேளையில் கண்ணுக்கு புலப்படுகின்றன. இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உள்ளூர் மக்களும் கடுமையான குளிரால் உடல் நல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள்.

விவசாயிகள் கவலை: இதுபோன்ற தட்பவெப்ப நிலை வழக்கத்திற்கு மாறானது என்று கூறும் அப்பகுதி மக்கள், குளிரில் இருந்து தப்பிப்பதற்காக தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். உதகமண்டலத்தில் உள்ள காந்தல் மற்றும் தலைகுந்தம் பகுதியில் வெப்ப நிலை 1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. போட்டானிக்கல் கார்டன் பகுதியில் 2 டிகிரி செல்சியசுக்கும் சற்றும் மேலே வெப்ப நிலை நிலவியது.

வழக்கத்திற்கு மாறாக நிலவும் இந்த கிளைமேட் அப்பகுதி மக்களுக்கும் சூழலியல் ஆர்வலர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உறைபனி அளவுக்கு வெப்ப நிலை குறைந்துள்ளது விவசாயத்தையும் கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நீலகிரி சுற்றுச்சூழல் சமூக அறக்கட்டளையின் (NEST) வி சிவதாஸ் இது தொடர்பாக கூறியதாவது:-

மிகவும் சவாலானது: உலக வெப்பமயமாக்கல் மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக இத்தகைய கால நிலை மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். குளிர்காலம் தொடங்குவதற்கு கொஞ்சம் தாமதமானது. தற்போது நிலவும் காலை நிலை மாற்றம் மிகவும் சவாலானது. எனவே இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதேபோல், வழக்கத்திற்கு மாறான அளவுக்கு குளிர் நிலவுவதால் தேயிலை பயிரிடுவதும் பாதிப்பை சந்தித்து இருப்பதாக தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களின் செயலர் ஆர். சுகுமாரன் தெரிவித்தார்.

தேயிலை உற்பத்தி பாதிப்பு: இது தொடர்பாக ஆர். சுகுமாரன் கூறுகையில், "நீலகிரியில் அதிக அளவு தேயிலை தோட்டங்கள் உள்ளன. தற்போதைய காலநிலையால் தேயிலை தோட்டங்களும் கடும் சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளது. டிசம்பரில் பெய்த கனமழை மற்றும் அதைத்தொடர்ந்து கடும் குளிர் ஆகியவை தேயிலை பயிரிடுவதை பாதித்துள்ளது. வரும் மாதங்களில் தேயிலை உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என அஞ்சுகிறோம்" என்றார்.

உள்ளூர் மக்களும் இருசக்கர வாகனங்களில் எல்லாம் பயணிக்க முடியாத அளவுக்கு குளிர் இருப்பதாகவும் மூச்சு விடுவதில் சிரமம், கடுமையான தலைவலி, காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+