நெல்லையை மீண்டும் புரட்டிப்போட்ட அதி கனமழை..24 மணி நேரத்தில் 220 மில்லி மீட்டராம்! இன்றும் தொடருமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை ஊத்து பகுதியில் 220 மில்லி மீட்டர் அதிகனமழை பதிவாகி இருக்கிறது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

Very heavy rainfall of 220 mm in Tirunelveli Oothu hill place

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள ஊத்து பகுதியில் 220 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லை நாலுமுக்கு பகுதியில் 210 மில்லி மீட்டர் மழையில், காக்காச்சி மலைப் பகுதியில் 200 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலையில் 102 மில்லி மீட்டர் மழையில் கொட்டித் தீர்த்து இருக்கிறது.

இதேபோல் நேற்றும் காக்காச்சி (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 16, நாலுமுக்கு (திருநெல்வேலி) 15, மாஞ்சோலை (திருநெல்வேலி) 6, பாபநாசம் (திருநெல்வேலி), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 2, தரங்கம்பாடி (மயிலாடுதுறை), சிதம்பரம் (கடலூர்), கொடவாசல் (திருவாரூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), பரங்கிப்பேட்டை (கடலூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), சீர்காழி (மயிலாடுதுறை), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 1. மழை கொட்டித்தீர்த்தது.

"இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 1.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

02.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

03.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04.01.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+