வங்கக் கடலில் உருவாகும் “டானா’ புயல்.. 23 ஆம் தேதி டார்கெட்.. அடிச்சு நொறுக்கப் போகுதா?
டெல்லி: வங்கக்கடலில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வரும் 23 ஆம் தேதி புயலாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த "டானா" (DANA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 22 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 23 ஆம் தேதி கிழக்கு மத்திய வங்கக் கடலில் புயலாக உருவாகும் என தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த டானா (DANA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா மேற்கு வங்கம் இடையே அக்டோபர் 24 ஆம் தேதி காலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிசா, மேற்கு வங்காளம் நோக்கி நகர்வதால் இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 20, 21, 24-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 22, 23, 25-ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும், நாளை (அக்.21) கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications