ஒரே இடத்தில் டேரா போடும் காற்றழுத்தம்! 2015 லும் இப்படித்தான் ஆச்சு! ஆனால்.. வெதர்மேன் போஸ்ட்
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்தமாக வலுவிழந்த டிட்வா ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பது ஏன் என்பது குறித்தும் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே போல் ஒரு சூழல் ஏற்பட்டதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் சென்னை கடற்கரைக்கு அருகே 18 மணி நேரமாக நிலை கொண்டிருப்பது ஏன்? இந்த டிட்வாவால் வடமேற்கு பகுதியில் மட்டும் மேகக் கூட்டங்கள் உருவாவது ஏன் என்றெல்லாம் உங்களுக்குள் பல கேள்விகள் இருக்கும்.

இதற்கான ஒரே பதில் மேற்கில் இருந்து ஒரு குறைந்த பலம் கொண்ட மேற்கு திசை காற்றானது டிட்வாவை கிழக்கு திசைக்கு தள்ளுகிறது. அதே நேரம் கிழக்கில் இருந்து ஒரு அதிக பலம் வாய்ந்த காற்று அந்த பக்கம் செல்லவிடாமல் மறித்து நிற்கிறது.
இதனால்தான் டிட்வாவால் மேற்கும் போகமுடியாமல் கிழக்கும் போக முடியாமல் சிக்கியுள்ளது. இந்த குறைந்த பலம் பலம் கொண்ட மேற்கு திசை காற்று புதன்கிழமை நகர்ந்து செல்லும். இதன் பிறகு டிட்வா தமிழக கடற்கரைக்கு மேற்கு பக்கம் நகரும். இந்த மேற்கு திசை காற்றானது பொதுவாக தீவிர மழை மேகங்களையும் திடீர் புயல் உருவாக்கத்தையும் ஏற்படுத்தும்.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீவிர காற்றழுத்தமானது இந்த டிட்வா போல் மேற்கு திசை காற்றால் நகர முடியாமல் சிக்கி பெரிய அளவு மழையை கொடுத்தது. ஆனால் டிட்வா போல் அந்த தீவிர காற்றழுத்தம் சிக்கிக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
நல்ல மழை தொடங்கியது, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்ட கடலோரத்திற்கு இன்னும் அருகே தாழ்வு மண்டலம் நெருங்கும். இதனால் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு சிறப்பான மழையை தரும். இந்த காற்றழுத்தம் இன்று இரவு புதுச்சேரி- சென்னை இடையே கிழக்கு கடற்கரைச் சாலை அருகே கரையை கடக்கும் என கணித்துள்ளார்.












Click it and Unblock the Notifications