ஒரே இடத்தில் டேரா போடும் காற்றழுத்தம்! 2015 லும் இப்படித்தான் ஆச்சு! ஆனால்.. வெதர்மேன் போஸ்ட்
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்தமாக வலுவிழந்த டிட்வா ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பது ஏன் என்பது குறித்தும் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே போல் ஒரு சூழல் ஏற்பட்டதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் சென்னை கடற்கரைக்கு அருகே 18 மணி நேரமாக நிலை கொண்டிருப்பது ஏன்? இந்த டிட்வாவால் வடமேற்கு பகுதியில் மட்டும் மேகக் கூட்டங்கள் உருவாவது ஏன் என்றெல்லாம் உங்களுக்குள் பல கேள்விகள் இருக்கும்.

இதற்கான ஒரே பதில் மேற்கில் இருந்து ஒரு குறைந்த பலம் கொண்ட மேற்கு திசை காற்றானது டிட்வாவை கிழக்கு திசைக்கு தள்ளுகிறது. அதே நேரம் கிழக்கில் இருந்து ஒரு அதிக பலம் வாய்ந்த காற்று அந்த பக்கம் செல்லவிடாமல் மறித்து நிற்கிறது.
இதனால்தான் டிட்வாவால் மேற்கும் போகமுடியாமல் கிழக்கும் போக முடியாமல் சிக்கியுள்ளது. இந்த குறைந்த பலம் பலம் கொண்ட மேற்கு திசை காற்று புதன்கிழமை நகர்ந்து செல்லும். இதன் பிறகு டிட்வா தமிழக கடற்கரைக்கு மேற்கு பக்கம் நகரும். இந்த மேற்கு திசை காற்றானது பொதுவாக தீவிர மழை மேகங்களையும் திடீர் புயல் உருவாக்கத்தையும் ஏற்படுத்தும்.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீவிர காற்றழுத்தமானது இந்த டிட்வா போல் மேற்கு திசை காற்றால் நகர முடியாமல் சிக்கி பெரிய அளவு மழையை கொடுத்தது. ஆனால் டிட்வா போல் அந்த தீவிர காற்றழுத்தம் சிக்கிக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
நல்ல மழை தொடங்கியது, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்ட கடலோரத்திற்கு இன்னும் அருகே தாழ்வு மண்டலம் நெருங்கும். இதனால் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு சிறப்பான மழையை தரும். இந்த காற்றழுத்தம் இன்று இரவு புதுச்சேரி- சென்னை இடையே கிழக்கு கடற்கரைச் சாலை அருகே கரையை கடக்கும் என கணித்துள்ளார்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications