Cyclone Michaung: மிக்ஜாம் புயல் ஆந்திரா பாபட்லா அருகே 100 கி.மீ. "பேய்" காற்றுடன் கரையை கடந்தது!
விசாகப்பட்டினம்: வங்க கடலில் மையம் கொண்டு தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருமழையை கொட்டிய மிக்ஜாம் புயல், ஆந்திராவின் நெல்லூர்- மச்சிலிபட்டணம் (மசூலிப்பட்டினம்) இடையே பாபட்லாவில் இன்று பிற்பகல் தொடங்கி மாலை வரை100 கி.மீ வேகத்தில் பயங்கரமான சூறவாவளி பேய் காற்றுடன் கரையை கடந்தது.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவமாடிவிட்டது. சென்னைக்கு மிக அருகே 30 மணி நேரம் நிலை கொண்டு நின்றது மிக்ஜாம் புயல். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்தது. 30 மணிநேரத்தில் 40 செ.மீ-க்கும் அதிகமான மழை வெளுத்தெடுத்தது.

இதனால் சென்னை மாநகரும் புறநகர் பகுதிகளும் வெள்ளத்தால் தத்தளித்தன. வங்க கடல் கடும் சீற்றமாக இருந்தால் வெள்ளநீரும் கடலுக்குள் உள்ளே புக முடியவில்லை. இதனால் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் ஒட்டுமொத்தமாக பெரும் தத்தளிப்பும் பாதிப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு சென்னையை விட்டு மிக்ஜாம் புயல் விலகி ஆந்திராவுக்குள் நுழைந்தது. பின்னர் இன்று பிற்பகல் தொடங்கி மாலை வரை ஆந்திரா மாநிலம் நெல்லூர்- மச்சிலிபட்டணம் இடையே பாபட்லா அருகே கரையை கடந்தது மிக்ஜாம் புயல். அப்போது மணிக்கு 100 கிமீ வேகத்தில் அதிவேகமாக புயல் காற்றும் வீசியது. இந்த புயல் அடுத்த 2 மணிநேரத்தில் வலுவிழக்கும்.
முன்னதாக மிக்ஜாம் புயலால் ஆந்திராவிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பதி சூலூர்பேட்டையில் மிக அதிகபட்சமாக 20.2 செமீ மழை பதிவானது. நெல்லூரில் 19.5, தடாவில் 13.8 செ.மீ, காளகஸ்தியில் 13.4 செமீ மழை பதிவானது. திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலும் மிக்ஜாம் புயல் கரையைக் கடப்பதால் பேருந்துகள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஆந்திரா மாநில அரசு முழு வீச்சில் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications