டிட்வா புயல் எங்கே உள்ளது? எங்கே செல்லும்? தமிழ்நாட்டை தாக்குமா? இந்த போட்டோஸ் பாருங்க!
சென்னை: புலி வருது.. புலி வருது என்று சொல்வார்களே.. அப்படி ஒரு கதையாக மாறிவிட்டது வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னங்கள். கடந்த 3 வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 புயல்கள் உருவாகிவிட்டன. நானும் ரவுடிதான் என்று வீராப்பாக வரும் புயல்கள்.. அப்படியே வரட்டாம் மாமே டுர்ர்ர் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறது.
மொந்தா புயல் முதலில் உருவானது.. ஆஹா பெயரே இப்படியே இருக்கே.. என்று பயப்பட்டால்.. சுகர் வந்த சுனாமி போல எதுவும் செய்யாமல் காணாமல் போய்விட்டது மொந்தா புயல். அடுத்து வந்த சென்யார் புயலும்.. நடு பெஞ்சில் அமர்ந்து இருக்கும் அமைதியான மாணவன் போல.. எதுவும் செய்யாமல் மறைந்து. தோற்றம் எழுதுவதற்கு முன் மறைவு தேதி எழுதும் அளவிற்கு வேகமாக ஓடிவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் வங்கக்கடலில் தற்போது டிட்வா புயல் மையம் கொண்டு உள்ளது. இது எங்கே உள்ளது? என்ன செய்யும்? எங்கே தாக்கும்? என்பதை எல்லாம் கீழே கொடுக்கப்பட்டு உள்ள கிராபிக்ஸ் புகைப்படங்கள் வழியாக காண்போம்!
புயல் எங்கே உள்ளது?
குமரிக் கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா புயலாக நிலவி வருகிறது.

சென்னையில் இருந்து எவ்வளவு தூரம்?
டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

புயலின் ரூட் என்ன?
வடமேற்கு திசையில் நகர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு அருகே வரும். அதாவது நவம்பர் 29ம் தேதி புயலின் மேற்கு பகுதி காவிரி டெல்டா மாவட்டங்கள் அருகே வந்து விழும்.

டெல்டாவில் மழை பெய்யுமா?
நவம்பர் 28 (வெள்ளி) இரவு மழை டெல்டாவில் பெய்ய துவங்கும். நவம்பர் 30ம் தேதி (ஞாயிறு) காலை வரை மழை தீவிரமாக பெய்யும். நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிக கனமழை பதிவாகும்.

சென்னையில் மழை பெய்யுமா?
சென்னையில் 30ம் தேதி மழைக்கு வாய்ப்பு உள்ளது.

டெல்டாவிற்கு பின் எங்கே செல்லும்?
ஞாயிற்றுக்கிழமை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு இந்த புயல் செல்லும். தெற்கு ஆந்திர பிரதேசம் அருகே புயல் வலிமையை இழக்கும்.













Click it and Unblock the Notifications