வங்கக் கடலில் திடீர் மாற்றம்.. வங்கக்கடலில் அடங்காத "கொடூரன்"..என்னாது, இன்னும் ஒரு வாரமா? போச்சுடா
சென்னை: வங்கக்கடலில், புயலின் தாக்கம் ஓயவில்லை என்றும், முகத்துவார பகுதிகளில் வெள்ள நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் நல்ல மழை கிடைத்து கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில், புயல் வந்துவிட்டது.. வங்கக்கடலில் கடந்த 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயலானது, சென்னையையே புரட்டி போட்டுவிட்டு சென்றுவிட்டது.

திருவள்ளூர்: தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களையும் ஏற்படுத்தியது.. ஆனால், 2 நாட்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்துவிட்டது.. இதனால், சென்னையில் மழை விட்டாலும், இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை. ஆனால், அதற்குள் இன்னொரு புயல் தாக்கக்கூடும் என்று செய்திகள் பரவின.. ஆனால், இதெல்லாம் வதந்திகள் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில், புயலின் தாக்கம் ஓயவில்லை என்றும், முகத்துவார பகுதிகளில் வெள்ள நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் ராமச்சந்திரன் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், கடலின் கொந்தளிப்பு ஏன் இன்னமும் குறையவில்லை என்பது குறித்தும் விளக்கியுள்ளார். அதன் சுருக்கம்தான் இது:
வங்கக்கடல்: "பொதுவாக வங்கக்கடலில் உருவாகும் புயல், குறிப்பிட்ட திசையில் பயணித்து, எங்கே கரையை நெருங்குகிறதோ, அங்கேயே கரையை கடக்கும்.. ஆனால், இந்த மிக்ஜாம் புயல், அந்தமான் அருகே உருவானாலும், சென்னையை நெருங்கி வந்து, இங்கு கரையை கடக்காமல், வடக்கில் திரும்பி ஆந்திராவில் கரையை கடந்துள்ளது.
இதனால், பூமத்தியரேகை அருகில் உருவாகும் புயல்களின் வெளிச்சுற்று பகுதி, எப்போதுமே கடிகார சுற்றுக்கு எதிர் திசையில் அதிவேகத்தில் சுற்றும். இது புயலின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ சுற்றளவுக்கு சூறாவளியாக வீசுவதுடன், கடுமையான தாக்கத்தை, கடலிலும், நிலத்திலும் ஏற்படுத்திவிடும்.
ராட்சத அலைகள்: அதனால்தான் 13 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்தவாறே உள்ளன.. இப்படி அதிக அலைகள் எழும் நேரத்தில், நிலத்தில் இருந்து வரும் வெள்ள நீரை, கடல் உள்வாங்குவதிலும் தாமதம் ஏற்படும்.... அதனால்தான், புயல் கரையை கடந்தாலும், கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது.. இன்னும் ஒரு வாரத்துக்கு கடலில் ராட்சத அலைகள் ஏற்படும் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications