திடீரென சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. "ஜில்"லென குளிந்து போன நகரம்.. மக்கள் மகிழ்ச்சி
சென்னை: சென்னை இன்று இரவு திடீரென கனமழை பெய்தது. முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகள் கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். எனினும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிலும் கிண்டி, அசோக் நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது.

அவ்வப்போது லேசான அல்லது மிதமான மழை பெய்து வருவதால் சென்னை நகர் குளிர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில், இன்று இரவு திடீரென சென்னையில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் வில்லிவாக்கம், அயனாவரம் பாடி, கொளத்தூர் ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெயது. இரவு பெய்த திடீர் மழையால் சென்னை நகரம் குளிர்ந்து காணப்படுகிறது. தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழக்கு சுழற்சியால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications