சசி குடும்பத்தால் கடைசி வரை ஜெ.வைக் காண முடியாமல் கட்டம் கட்டி விரட்டப்பட்ட அண்ணன் மகள் தீபா
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அருகே ரத்த சொந்தங்கள் யாரும் நிற்கவில்லை. ஒரே ரத்த சொந்தமான அண்ணன் மகள் தீபாவையும் அருகிலேயே விடாமல் கட்டம் கட்டி விரட்டியடித்துள்ளனர்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஞாயிறன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் திங்கட்கிழமை இரவு மரணமடைந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் திரு ஜெயராமனின் மகள் தீபா ஞாயிறன்று இரவு திடீரென அங்கு வந்தார். மருத்துவமனைக்குள் ஆவேசமாக நுழைய முயன்றார். ஆனால் காவல் துறையினர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எனது அத்தையை பார்க்க என்னை அனுமதிக்க மறுக்கப்படுகிறது என்று கதறி அழுதார். சசிகலா சொல்லித்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் நான். ஆனால் என்னை உள்ளே விட மறுப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பினார்.

திங்கட்கிழமை இரவு ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் நடைபெற்ற இறுதிச்சடங்கிலும் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கடைசி வரை போயஸ்தோட்டத்திற்கு தீபாவை நுழைய விடவில்லை. ஜெயலலிதாவின் உடல் போயஸ் தோட்டத்தில் இறுதி சடங்கு நடத்தப்பட்டு, பின்னர் இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் முகத்தை கடைசி வரை அவரது அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதாவிற்கு சொந்தமான பல ஆயிரக்கணக்கான சொத்துக்கள் இனி யாருக்கு சொந்தமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் இன்று மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications