கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்
கோயம்புத்தூர்: கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்கள் குறு, சிறு விவசாயிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும். இயற்கைச் சீற்றங்கள் அல்லது எதிர்பாராத பயிர் இழப்புகள் ஏற்படும் காலங்களில், அரசு அறிவிக்கும் கடன் தள்ளுபடி சலுகைகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவே விவசாயிகளை நேரடியாகச் சென்றடைகின்றன. இத்தகைய நன்மைகளும் பயன்களும் நிறைந்த கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்தான் தற்போது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்ட விவசாயிகள் முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும், அவர்களின் அவசரக் கால முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் கூட்டுறவு வங்கிகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி
குறிப்பாக வணிக வங்கிகளை விடக் குறைந்த வட்டியில் அல்லது வட்டி இல்லா நிலையிலும், எளிய ஆவண நடைமுறைகளுடனும் வழங்கப்படும் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்கள் குறு, சிறு விவசாயிகளுக்குப் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். விதை வாங்குதல், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி கொள்முதல், நிலம் தயாரிப்பு மற்றும் அறுவடைப் பணிகளுக்கான உடனடி மூலதனத்தை இந்த வங்கிகள் வழங்குகின்றன.
இதனால் விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்குவது தவிர்க்கப்படுவதுடன், உரிய காலத்தில் பயிர் சாகுபடிப் பணிகளைத் தொய்வில்லாமல் எளிதாக மேற்கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல இயற்கை சீற்றங்கள் அல்லது எதிர்பாராத பயிர் இழப்புகள் ஏற்படும் காலங்களில், அரசு அறிவிக்கும் கடன் தள்ளுபடி சலுகைகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவே விவசாயிகளை நேரடியாக சென்றடைகின்றன. இத்தகைய நன்மைகளும் பயன்களும் நிறைந்த கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்தான் இப்போது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விவசாயிகள் அதிருப்தி
கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, வரும் ஜூன் மாதம் 22ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல், தமிழக அரசு பகுதி அளவிலான கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அரசாணை வெளியிட்டுள்ளது தான் இந்தத் தீவிரப் போராட்ட முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
அரசாணையில் குளறுபடி
சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, ரூ. 50,000-க்கு உட்பட்ட கடன்கள் முழுமையாகவும், ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரையிலான கடன்களுக்கு ரூ. 40,000 வரையிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்றுள்ள நடுத்தர மற்றும் சிறு விவசாயிகளுக்கு வெறும் ரூ. 5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளிடையே பலத்த ஏமாற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டங்களில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கரும்பு, நெல் மற்றும் இதர பணப்பயிர்களை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்குப் பல்லாயிரக்கணக்கில் செலவாகும் நிலையில், அரசு அறிவித்துள்ள இந்த மிகக் குறைந்த தள்ளுபடித் தொகை, கடன்பாக்கியில் தவிக்கும் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய கடன்களை பெற முடியாமல் தவிப்பு
மேலும் குறிப்பிட்ட ஒரு காலவரம்பை அதாவது மே 1, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரை மட்டும் கணக்கில் கொண்டு இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்னரே தொடர் நஷ்டத்தால் கடனைத் திருப்பிக் செலுத்த முடியாத ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் விடுபட்டுள்ளனர். அதனால் அவர்களின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை தொடர புதிய கடன்களைப் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
எனவே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அரசாணையில் உள்ள குளறுபடிகளை நீக்கி, 5 ஏக்கர் வரையிலான நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களையும் எந்தவிதமான நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே மாவட்டத் தலைநகரங்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் ஜூன் 22 முதல் தமிழகத்தின் 30 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கும் தீவிரமான ஜனநாயக வழிப் போராட்டம் தொடங்கவுள்ளது. கோவையில் சுலூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தீவிரமடைந்து வரும் இந்த விவகாரம், தமிழக அரசுக்கு விவசாயத் துறையில் ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது..!!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications