பன்னீர்செல்வம் தரப்புக்கு நெருக்கடி! பாய்கிறது அடுத்தடுத்து வழக்குகள்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு எதிராக வழக்குகள் பாய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் அடுத்தடுத்து வழக்குகள் பாய உள்ளது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா முதல்வராக முயற்சித்தார். அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் முதல்வராக இருந்த ஓபிஎஸ் ராஜினாமா செய்தார்.
பின் அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் அணி சசிகலா அணி என ஆனது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த சசிகலா தனது ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக் குழு தலைவராக அறிவித்தார்.

சசிகலாவுக்கு வந்த எதிர்ப்புகள்
ஆனால் சசிகலா தரப்பைச் சேர்ந்தவர்கள் முதல்வராவதற்கு ஓபிஎஸ் அணி எதிர்ப்பு தெரிவித்தது. சசிகலா அணிக்கு மக்களிடையேயும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

சசிக்கு எதிரான ஓபிஎஸ் அணி
சசிகலா தரப்பின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்பதை தடுக்கும் வகையிலும் கட்சியை கைப்பற்றும் வகையிலும் ஓபிஎஸ் அணி செயல்பட்டு வந்தது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறினர்.

ஆட்சியமைத்த சசி குரூப்
இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா தரப்பு எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து காய் நகர்த்தியது. இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

ஓபிஎஸ்க்கு நெருக்கடி
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதற்கான பணிகளில் இறங்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஓபிஎஸ் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் விரைவில் வழக்குகள் பாயக் கூடுமாம்.
-
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
"ஓபிஎஸ் என்னை கைவிட்டுவிட்டார்!" ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் முக்கிய தகவலை சொன்ன உசிலம்பட்டி ஐயப்பன்? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications