தமிழக டெல்டா மாவட்டங்களில் நிலம் உள்ளிறங்குகிறதா?.. ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் காரணமா?
தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும். டெல்டாவே உள்ளிறங்கி (subsidence) கொண்டிருக்கிறது. கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் சிக்கலை விட டெல்டா உள்ளிறங்குவது பெரிய ஆபத்து என்று நாங்கள் விவாதிக்கும்போது எல்லாம், கிருஷ்ணா-கோதாவரி பகுதிகளை பாருங்கள், அங்கேயும் தான் எண்ணெய் துரப்பணிகள் நடைபெறுகின்றன என்று எதிர் வாதங்கள் வரும்.
தமிழகத்திலாவது கடந்த சில ஆண்டுகளாக தான் டெல்டாவில் நடைபெறும் துரப்பணிகள் தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுகின்றன, ஆனால் 2009 ஆம் ஆண்டு முதலே ஆந்திராவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வழக்கும் நடைபெற்று, வல்லுனர்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

புவிவெப்பமயமாதலால் கடல் மட்டம் சில மில்லி மீட்டர் உயர்ந்துவருகிறது, ஆனால் கிருஷ்ணா- கோதாவரி (KG Basin) டெல்டாவில், நிலம் 5.4 அடி உள்ளிறங்கியுள்ளது. டெல்டா உள்ளேபோவதற்கு காரணம், ஓ.என்.ஜி.சி. நடத்தும் எண்ணெய் துரப்பணிகளே என்று மக்கள் போராடுகிறார்கள். பல்வேறு அறிவியல் தரவுகள், கால்வாயில் ஓடும் நீரின் அளவு என எதை வைத்து பார்த்தாலும், டெல்டா உள்ளிறங்கிருப்பது தெளிவாக புலப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓ.என்.ஜி.சி. நடத்தும் எண்ணெய் துரப்பணிகளே டெல்டா உள்ளிறங்குவதற்கு காரணம் என்கிறார் ஆந்திர பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற நிலவியல் (geologist) நிபுணர், கிருஷ்ணா ராவ். செயற்கைகோள் படங்கள், தரவுகள், வரைபடங்கள் என்று எதை வைத்து பார்த்தாலும் நிலவியல் அமைப்பில் மாற்றங்கள் நிகழ்துள்ளதை சரியாக கண்டறிய முடிகிறது.
இதுகுறித்து, ஓ.என்.ஜி.சி. நடத்திய இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட மறுக்கிறது, ஆனால் அந்த ஆய்வறிக்கையில், டெல்டா பகுதியில் நில அமைப்பில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது தெளிவாக தெரிகிறது. டெல்டா உள்ளிறங்குவது பெரிய பிரச்சனை தான்.
இப்போது என்ன சொல்வீர்கள் தேச பக்தர்களே?
- சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications