ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள்
தூத்துக்குடி: மேற்காசிய போரால் ஓமன் அருகே தவித்துக்கொண்டு இருக்கும் கப்பலில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த மாலுமி உயிரிழந்தார். 11 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து கப்பல் ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். 4 நாட்கள் ஆனதால் சடலம் அழுக தொடங்கியுள்ளதாகவும், குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை வைத்து உடலை பாதுகாத்து வருவதாகவும் வேதனையுடன் சக ஊழியர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் எடுத்துவர சென்ற நூற்றுக்கணக்கான கப்பல்கள் கடந்த 107 நாட்களாக முடங்கி கிடக்கின்றன.

இந்திய மாலுமி உயிரிழப்பு
இங்கு 13-க்கும் மேற்பட்ட இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளன. இங்குள்ள கப்பல்களில் 562 இந்திய மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில் ஓமன் நாட்டில் உள்ள டுக்ம் துறைமுகத்தில் நின்றிருந்த எம்டி செலஸ்டியல் என்ற கப்பலில் பணியாற்றிய தமிழக மாலுமி நிஷாந்த் உயிரிழந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை கிடைக்காததால் தமிழக மாலுமி உயிரிழந்துள்ளார். அவரது உடலை விரைவில் இந்தியா அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால்தான், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு அங்குள்ள கப்பல்கள் வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் அவரது உடலை எடுத்து வர முடியாத நிலை உள்ளது. சடலத்தை கப்பல் கேப்டன் எடுத்துவர மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. கப்பலில் சடலத்தை அழுகாமல் பாதுகாக்கும் ஃப்ரீசர் வசதி ஏதும் இல்லை. இதனால், குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை நிஷாந்தின் உடல் மீது வைத்துள்ளனர்.
காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ
எனினும், அவரது உடல் அழுகத் தொடங்கியுள்ளதாக கப்பல் ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு கப்பல் ஊழியர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
ओमान में फंसे जहाज पर 11 जून को भारतीय सेकंड ऑफिसर निशांत उर्थनाथन की मौत हो गई।
— Congress (@INCIndia) June 14, 2026
पिछले 2-3 दिनों से उनका पार्थिव शरीर हिंदुस्तान आने की राह देख रहा है, लेकिन मोदी सरकार की तरफ से कोई मदद नहीं की जा रही।
उनका शव सड़ रहा है, जिसे बचाने के लिए उनके साथी पानी की ठंडी बोतलों का… pic.twitter.com/7mHYbXlFGB
ஓமனில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஒரு கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமி நிஷாந்த் உர்த்தநாதன் உயிரிழந்தார். கடந்த 2 முதல் 3 நாட்களாக அவரது உடலை இந்தியா எடுத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. மோடி அரசு இதுவரை தேவையான உதவிகளை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாலுமியின் உடல் சிதைவடையத் தொடங்கிய நிலையில், உடன் இருந்தவர்கள் குளிர்ந்த நீர் பாட்டில்களை பயன்படுத்தி உடலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர்

இந்திய குடிமக்கள் உயிருடன் இருக்கும்போதும், உயிரிழந்த பிறகும் அரசின் அலட்சியத்தின் விலையைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. நிஷாந்த் உர்த்தநாதனின் உடலை உரிய மரியாதையுடன் விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வர மோடி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்" என்று பதிவிட்டுள்ளது.
உயிரிழந்த மாலுமி தூத்துக்குடி மாவட்டம், குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் நிஷாந்த் உயிர்த்தநாதன் (35). இவரது மனைவி சராபின். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தையும், 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர். நிஷாந்த், கடந்த 15 ஆண்டுகளாக கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஓமன் நாட்டின் ரோமனா நிறுவனத்தின் மூலம் 'எம்.டி. செலிஸ்டியல்'என்ற டேங்கர் கப்பலில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சையும் அளிக்க முடியாத சூழலில், கடந்த 11 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
-
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications