Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று நடக்க போகுது.. காத்திருங்கள்.. புதிர் போடும் இஸ்ரேல் நெதன்யாகு.. கொடுமை

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: "ஈரானை நிலைகுலைய வைக்க எங்களிடம் ஒரு மிகப்பெரிய 'சர்ப்ரைஸ்' காத்திருக்கிறது!" - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த ஒற்றை வரி அறிவிப்பு, இப்போது சர்வதேச அரசியலில் 'திக் திக்' நிமிடங்களை உருவாக்கியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே இஸ்ரேல் - ஈரான் இடையே முற்றியுள்ள போர்ச் சூழல், தற்போது அதன் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மார்ச் 7 அன்று இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நெதன்யாகு, ஈரானிய ராணுவத்திற்கு ஒரு பகிரங்க எச்சரிக்கையை விடுத்தார்.

iran isreal war

ஆயுதங்களை கீழே போடுங்கள்... இல்லையேல் மரணம்!

நெதன்யாகுவின் பேச்சில் முன்னெப்போதும் இல்லாத ஒரு ஆக்ரோஷம் தெரிந்தது. "ஈரானிய ராணுவத்தினர் (IRGC) தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், பிடிவாதமாகப் போரிடுபவர்கள் நிச்சயம் மரணத்தைத் தழுவுவார்கள்" என்று அதிரடி காட்டினார்.

ஈரான் வான்பரப்பின் முழுக் கட்டுப்பாடும் இப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வசம் இருப்பதாகவும், அடுத்தகட்டமாக ஈரானிய ஆட்சியை முற்றிலுமாக வேரறுப்பதே தங்களின் இலக்கு என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

அந்த 'சர்ப்ரைஸ்' ஒருவேளை 'அது'வாக இருக்குமோ?

சர்வதேச அரசியல் வல்லுநர்கள் நெதன்யாகு குறிப்பிட்ட அந்த 'சர்ப்ரைஸ்' என்னவாக இருக்கும் என்று மண்டையைப் பிச்சுக் கொள்கிறார்கள். ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் கிணறுகள் மற்றும் ராணுவ தளங்களை ஏற்கனவே இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கி வரும் நிலையில், "நாட்டை நிலைகுலைய வைக்கும் ரகசிய திட்டம்" என்பது ஒருவேளை 'அணுகுண்டு' (Nuclear Bomb) தாக்குதலைக் குறிக்கிறதோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

ஈரான் ஏற்கனவே தனது அணுசக்தித் திட்டங்களை ரகசியமாகச் செயல்படுத்தி வருவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், "முள்ளை முள்ளால் எடுப்பது போல", ஈரானின் அணுசக்தி மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இஸ்ரேலே நேரடியாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் துணிந்துவிட்டதா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அமெரிக்காவின் ஆதரவும்... உலக நாடுகளின் கலக்கமும்!

இஸ்ரேலின் வான்வழி ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்க முடியாவிட்டாலும், தரைவழியாக 'கொரில்லா' முறையிலான தாக்குதல்களை நடத்த ஈரான் திட்டமிடுகிறது. "ஆயுதங்களைக் கீழே போடுங்கள்" என நெதன்யாகு விடுத்த எச்சரிக்கைக்குப் பிறகு, ஈரானியத் தளபதிகள் மேலும் ஆவேசமடைந்துள்ளனர். "எங்கள் மண்ணில் கால் வைக்கும் ஒவ்வொரு இஸ்ரேலிய வீரனும் பிணமாகத்தான் திரும்புவான்" என ஈரானியப் புரட்சிகரப் படை (IRGC) எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பும் இஸ்ரேலுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், ஈரானில் நிலவி வரும் இந்த போர் பதற்றம் 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய மனிதப் பேரழிவாக மாறுமோ என்று ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது. ஒருபுறம் ஈரான் ஏவுகணைகளை வீசிப் பதிலடி கொடுத்தாலும், இஸ்ரேலின் இந்த 'மெகா சர்ப்ரைஸ்' திட்டம் ஈரானை வரைபடத்திலிருந்தே நீக்கிவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஈரானிய மக்கள் 'தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்க வேண்டிய நேரம் இது' என நெதன்யாகு அழைப்பு விடுத்திருப்பது, அந்நாட்டிற்குள் உள்நாட்டுப் புரட்சியைத் தூண்டும் ஒரு தந்திரமாகவும் பார்க்கப்படுகிறது.

ரஷ்யா மற்றும் சீனாவின் நிலைப்பாடு என்ன?

இந்த விவகாரத்தில் ஈரானுக்குப் பின்னால் ரஷ்யாவும் சீனாவும் மறைமுகமாக நிற்கின்றன. அமெரிக்காவின் தலையீட்டை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஒருவேளை இஸ்ரேல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், ரஷ்யா சும்மா இருக்குமா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+