காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் விலைவாசி உயர்ந்துவிடுகிறது: அமைச்சர் ராதாமோகன் சிங்
டெல்லி: மோடியின் குஜராத் மாடலை பின்பற்றி விவசாயத் துறையில் முன்னேற்றம் கொண்டு வருவேன் என்று விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய பாஜக தலைவர் ராதா மோகன் சிங்(64) விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் தனது பணி குறித்து கூறுகையில்,
நான் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க விரும்புகிறேன். அவர் குஜராத்தில் எடுத்த நடவடிக்கைகளை பின்பற்றி நான் நாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்பட நடவடிக்கை எடுப்பேன். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது தான் பெரிய சவாலாகும்.
எப்பொழுது எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுது எல்லாம் விலைவாசி உயர்கிறது. விவசாய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்கிறது.
பாஜக ஆளும் குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, விலைவாசி நிலையாக இருக்க முயற்சி செய்வோம் என்றார்.
டெல்லி:
மோடியின் குஜராத் மாடலை பின்பற்றி விவசாயத் துறையில் முன்னேற்றம் கொண்டு வருவேன் என்று விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய பாஜக தலைவர் ராதா மோகன் சிங்(64) விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் தனது பணி குறித்து கூறுகையில்,
நான் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க விரும்புகிறேன். அவர் குஜராத்தில் எடுத்த நடவடிக்கைகளை பின்பற்றி நான் நாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்பட நடவடிக்கை எடுப்பேன். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது தான் பெரிய சவாலாகும்.
எப்பொழுது எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுது எல்லாம் விலைவாசி உயர்கிறது. விவசாய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்கிறது.
பாஜக ஆளும் குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, விலைவாசி நிலையாக இருக்க முயற்சி செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications