ரத்தாகுமா இலவச மின்சாரம்?
கோவை:
தேர்தலுக்குப் பின் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம்உள்ளது என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.ஆர் சிவசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தேர்தலுக்குப் பின்னர் இலவச மின்சாரத்தை ரத்து செய்யப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆந்திரம்,கர்நாடக மாநிலங்களில் இந்த இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் வரும் தேர்தல் முடிந்த பிறகு ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலும், இப்போது 30 சதவீத பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே,அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் மபெரும் போராட்டத்தை தமிழக விவசாயிகள் சங்கம் நடத்தும் எனதமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications