சென்னையில் வேளாண் துணை அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை தாம்பரத்தில், வேளாண் துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை: தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்கரவர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை செய்த தீபன் சக்ரவர்த்தி தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றியவர். தீபன் சக்ரவர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது உடலை மீட்ட போலீசார், அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து, தீபன் சக்ரவர்த்தியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி சுமையா? வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமாக ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதற்கான மர்மம் விலகவில்லை. தற்போது மற்றொரு வேளாண் அதிகாரியின் தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.