தாராளமயமாக்கலால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும்
ஈரோடு:
சர்வதேச வர்த்தகம் தாரளமயாக்கப்படும்போது விவசாயம் கடும் பாதிப்பிற்குள்ளாகும் என ஓய்வு பெற்ற உதவிவிவசாய இயக்குநர் கணேசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் விவசாயப் பட்டதாரிகள் ஆலோசனை மற்றும் சேவை மையத்தை திறந்து வைத்து ஓய்வு பெற்ற உதவிவிவசாயத் துறை இயக்குநர் கணேசன் பேசியதாவது:
நமது நாடு விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. 60 சதவீதம் பேர் விவசாயத்தில்ஈடுபட்டுள்ளனர். இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. அதோடு மத்தியஅரசு விவசாயிகளுக்கு வழங்கி வந்த சலுகைகளை குறைத்து வருகிறது. உரத்திற்கு அழிக்கப்பட்டு வந்த மானியம்குறைக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கோதுமை, சர்க்கரை, பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. பால்உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆப்பிள் மற்றும் பால்பவுடர் இறக்குமதி தேவையற்றது.
சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தில் தாராளமயமாக்கல் கொள்கை விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படும். இதனை மாற்றஅரசு கொள்கையளவில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தொடர்ந்து மானியம் அளிக்கவேண்டும் என்றார்.
மத்திய விவசாயத் துறை ஓய்வு பெற்ற உதவி இணை இயக்குநிர் அருணாசலம் பேசுகையில்,
மத்திய அரசு விளைபொருள் விலை நிர்ணயத்திற்காக கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டியில் விவசாயப்பிரதிநிதிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை. இதனால் விவசாயப் பொருட்கள் விலை நிர்ணயம் செய்வதில்சரியான முறையை அரசு கடைபிடிக்கவில்லை.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 80 பயிர்களின் மூலம் உணவுஉற்பத்திக்கு ஆகும் செலவை கணக்கீடு செய்து அளித்தது. ஆனால் இதையும் இந்த கமிட்டி நிராகரித்து விட்டது.விவசாய விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.
விவசாயிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததால், உரிய முறையில் சாகுபடி நுணுக்கங்களும்அவர்களுக்குத் தெரியவில்லை என்றார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications