உணவுப் பொருள் - வரலாறு காணாத விலை உயர்வு!

இப்போது தென் மாநிலங்களிலும் தன் கோரமுகத்தை நீட்டியுள்ளது வறட்சி. முக்கியமாக ஆந்திரத்தில் உச்சகட்டம் என்றே சொல்லலாம். கடந்த ஒரு வாரத்தில் இங்கு ஏற்பட்டுள்ள அதிகபட்ச விலை உயர்வு மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது.
ஆந்திரா முழுவதும் நல்ல சாப்பாட்டு அரிசியின் கிலோ ரூ.50க்கும் மேல். சர்க்கரை விலையைக் கேட்டால் வாழ்க்கையே கசந்து விடும். கிலோ ரூ.38 வரை உயர்த்தப்பட்டுள்ளதாம். துவரம் பருப்பு ரூ.130 வரை விற்கப்படுகிறது.
தமிழகம் மட்டும் விதிவிலக்காகிவிடுமா... இன்றைய தேதிக்கு தமிழகத்தில் சர்க்கரை விலை கிலோ 33 முதல் 35 வரை இஷ்டத்துக்கும் விலை வைத்து விற்கிறார்கள் (கிராமப்புற ரேஷன் கடைகளில் ரூ.13 மட்டும்தான், ஆனால் அதைப் பெற மைல் நீள க்யூவில் நிற்கவேண்டும்!).
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 சதவிகித விலை உயர்வு ஏற்பட்டுள்ளது ஒவ்வொரு அத்தியாவசிய பொருளுக்கும் என்கிறது நேற்று வெளியான ஒரு விலை ஆய்வு முடிவு.
வருகிற நாட்கள் மிகக் கொடுமையாக இருக்கும் என்றும் சர்க்கரை விலை ரூ.50-ஐ எட்டிவிடும் என்றும், துவரம்பருப்பு ரூ.200 வரை கூட போகலாம் என்றும் மொத்த கொள்முதல் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரணம், 'அரசு சொல்வதைப் போல வர்த்தகர்களுக்கு அத்தியாவசிய பொருள் கொள்முதல் என்பது தாராளமாக இல்லை. இதனால் நாங்கள் மிகப் பெரும் விலைகொடுத்து வாங்க வேண்டியுள்ளது', என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் தென் மாநிலங்களில் விளைச்சல் நிலங்கள் நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்துவிட்டன. சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு விவசாயமே இல்லை என்ற நிலை. கிராமப்புறங்களில் நிலத்தின் விலையை ஏற்றிவிட்ட புரோக்கர்கள், விவசாயிகளை உழைக்கும் மனநிலையிலிருந்து கிட்டத்தட்ட விரட்டி விட்டார்கள்.
அரசும் தொழிற்சாலைகளுக்கு பெருமளவு நிலங்களை எடுத்துக் கொடுத்து வருகிறது. முக்கியமாக சின்னச் சின்ன ஏரிகளை அரசே தரைமட்டமாக்கி தொழிற்சாலைகளுக்குக் கொடுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
ஆக, வரும் நாட்கள் பெரும் சோதனைக் காலமாக அமையும் என்பதே உண்மை. நமக்கு நாமே நல்ல விதமாக நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பதைத்தவிர வேறு வழியில்லை!
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications