விவசாயக் கடன் தள்ளுபடிக்கு வாய்ப்பில்லை
சென்னை:
விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய இயலாது தமிழக அரசு புதன்கிழமை சட்டமன்றத்தில் தெரிவித்தது.
இடைக்கால பட்ஜெட்டின் மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய கூட்டுறவுத்துறைத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவு வங்கி கடன்கள்அல்லது அதன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமானால் நபார்டு வங்கி மீண்டும் கடன் உதவி வழங்காது என்றார்.
நபார்டு வங்கியிடமிருந்து 1000 கோடி ரூபாய் கடனுதவியை 6% வட்டிக்கு கூட்டுறவு வங்கிகள் பெற்று விவசாயிகளுக்கு 12% வட்டிக்கு கடனுதவிசெய்கின்றன.
விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி செய்து நபார்டு வங்கியிடமிருந்து கடனுதவியை இழக்கும் போது மீண்டும் விவசாயிகளுக்கு 18% வட்டியில் கடனுதவி வழங்கவேண்டியிருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அரசு வழங்குவதாகக் கூறிய 7% ஊக்கத்தொகை அரசுக்கும் வங்கிகளுக்குமிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவாகும் என்றும்அமைச்சர் விளக்கமளித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications