விவசாயியை ஏமாற்றிய நால்வர் கூட்டணி
ஊட்டி:
ரூ. 5 லட்சம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி விவசாயியை ஏமாற்றிய நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி அருகே அருகே உள்ள ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் ஜெயாபால். இவரிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, நான்கு பேர்பணம் கேட்டுள்ளனர். இதை நம்பிய அவர், ரூ. 95 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட நான்கு பேரும், தலை மறைவாகி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி, நான்கு பேரையும் தேடிஅலைந்தார். அப்போது நான்கு பேரும் கோவையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவை வந்த ஜெயபாலுக்கு, அவர்கள் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருப்பதாக தெரியவந்தது. இதனை உறுதி செய்து கொண்டஜெயபால், நான்கு பேர் மீதும் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார்.
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், நான்கு பேரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், ஜோன்ஸ், ஜெயபால், ஸ்ரீதரன்,சிவராஜ் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications