விவசாயிகளுக்கு ஊதியம் தர ராமதாஸ் கோரிக்கை

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்புகளின் சார்பில் விவசாயிகளுக்கான கொள்கை அறிக்கை குறித்த கலந்துரையாடல் சென்னையில் நடந்தது.
கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,
விவசாய தொழிலை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். வரும் தலைமுறை விவசாய தொழிலில் ஈடுபட முன்வர வேண்டும். நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவை நடக்க வேண்டுமென்றால் விவசாய தொழிலில் ஈடுபடுவருக்கு நேடியாக ஊதியம் கிடைக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. அதே போல் விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் வருமானத்தை பரிந்துரைக்க உழவர் வருவாய் குழு அமைக்க வேண்டும்.
விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும். இந்த உழவர் ஊதியத்தை ஆண்டுதோறும் மறு ஆய்வு செய்து உயர்த்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் உழவர் பேரியக்க தலைவர் சடகோபன், ராமதாசின் மகளும் பசுமை தாயகம் தலைவருமான செளம்யா அன்புமணி, விவசாய சங்கங்ளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications