தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு பருவமழையால் தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிக்கை:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
கடந்த 24 மணிநேரத்தில் காரைக்காலில் 3 செ.மீ, நாகப்பட்டினத்தில் 2 செ.மீ, சங்கரிதுர்கம், ஜெயங்கொண்டம், நடுவட்டம், செந்துறையில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இதனால் மேலும் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications