தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மேற்கு பருவமழையால் தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிக்கை:

TN, Puducherry likely to receive rain

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் காரைக்காலில் 3 செ.மீ, நாகப்பட்டினத்தில் 2 செ.மீ, சங்கரிதுர்கம், ஜெயங்கொண்டம், நடுவட்டம், செந்துறையில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இதனால் மேலும் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+