விஜய்யுடன் ஆளுநர் மாளிகைக்கு போன ஜனநாயகன் பட தயாரிப்பாளர்.. இதை நோட் பண்ணீங்களா
சென்னை: விஜய் பெரும்பான்மை இருப்பதாக 3 வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தெரிவித்தார். அப்போது அவருடன் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணனும் உடன் சென்றது கவனம் பெற்றுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளிடம் ஆதரவு கேட்டது தவெக.

இதில் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு கொடுத்த்து. காங்கிரசிடம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதையடுத்து விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார். ஆனால் நேற்று மாலை வரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இரண்டு முறை ஆட்சி அமைக்க உரிமை கோரியும் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் இன்று திடீர் திருப்பமாக விஜய்க்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு கடிதம் கொடுத்தன. விசிகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் ஆதரவு கொடுத்ததாக தகவல் வெளியாகின. இதையடுத்து இன்று மாலை விஜய் ஆளுநரை மூன்றாவது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறினார்.
அப்போது விஜய்யுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோருடன் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர்களோடு ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணனும் உடன் சென்றது கவனம் பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தை தயாரித்தவர் வெங்கட் நாராயணன் ஆவார்.
விஜய்யின் தவெகவினர் ஆளுநரை சந்திக்க சென்ற நிலையில், கட்சியில் இல்லாத ஒருவர் ஆளுநர் அர்லேகருடன் சென்றது ஏன் என அரசியல் விமர்சகர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications