Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் சிக்கிய அண்ணாமலை கார்.. தடாலடி முடிவால் ஆரவாரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள காரில் வந்த அண்ணாமலை, கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். இதனால் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்தும், இருசக்கர வாகனத்தின் மூலமாகவும் சென்றார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக அரசை கண்டித்து அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர், மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Annamalai GD Naidu Flyover BJP

தேஜகூ ஆர்ப்பாட்டம்

இதேபோல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகியவற்றை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலை வகித்தார்.

Annamalai GD Naidu Flyover BJP

களத்தில் அண்ணாமலை

மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கும் என கூறியிருந்தனர். அதிமுக, பாஜக, பாமக, தமாகா, புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேலுமணி, அண்ணாமலைக்காக ஆனால் அண்ணாமலை சுமார் 6 மணியளவில் தான் அண்ணாமலை ஆர்ப்பாட்ட களத்திற்கு வந்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டத்திற்கு மக்கள் வந்திருந்தது மற்றும் மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Annamalai GD Naidu Flyover BJP

போக்குவரத்து நெரிசல்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை, கோவை விமான நிலையத்தில் இருந்து ஜி.டி நாயுடு மேம்பாலம் மூலம் காரில் வந்தார். மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாமலை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார். கார் மிகவும் மெதுவாக நகர்ந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாமதம் ஏற்பட்டதால் அண்ணாமலை காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் மேம்பாலத்தில் நடந்தார்.

ஆரவாரம்

அண்ணாமலை நடந்து சென்றதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் ஆரவாரம் செய்தனர். சிலர் அண்ணாமலைக்கு ஹாய் சொல்லி கைக்குலுக்கி சென்றனர். பிறகு அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் அண்ணாமலை சென்றார். சிறிது தூரத்திற்கு பிறகு கட்சி நிர்வாகி ஒருவரின் காரில் ஏறி ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்துக்கு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+