For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல் - நின்னைப்
போன்றவர் செய்யத் தகுவதோ - இரு
கண்ணி லினியவ ராமென்றே - இந்தக்
காளையர் தம்மைஇங் குந்தைதான் - நெஞ்சில்
எண்ணி யிருப்ப தறிகுவாய், - இவர்
யார்? நின்றன் சோதர ரல்லரோ? - களி
நண்ணி தொடங்கிய சூதன்றோ? - இவர்
நாணுறச் செய்வது நேர்மையோ? (36)
இன்னும் பணயம்வைத் தாடுவோம் - வெற்றி
இன்னும் இவர் பெற லாகுங்காண்.
பொன்னுங் குடிகளுந் தேசமும் - பெற்றுப்
பொற்பொடு போதற் கிடமுண்டாம்- ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள் -இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால் - அவள்
துன்னும் அதிட்ட முடையவள் - இவர்
தோற்ற தனைத்தையும் மீட்டலாம் (37)
(தொடரும்...)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]