For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
15, பக்தி
(தொடர்ச்சி)
- 6. சோம்ப லழியும் - உடல்
சொன்ன படிக்கு நடக்கும், முடி சற்றுங்
கூம்புத லின்றி நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,
வீம்புகள் போகும் - நல்ல
மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும், பொய்ப்
பாம்பு மடியும்- மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும் (பக்தி)
7. சந்ததி வாழும், - வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்த்திடும்,
இந்தப் புவிக்கே - இங்கொர்
ஈசனுண்டா யின் அறிக்கையிட் டேனுன்றன்
கந்தமலர்த்தாள் - துணை ;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும், என்
சிந்தையறிந்தே - அருள்
செய்திட வேண்டும் என்றால் அருளெய்திடும் (பக்தி)
( தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]