For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
16. அம்மாக்கண்ணு பாட்டு
- 1. பூட்டைத் திறப்பது கையாலே - நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே - இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே
2. ஏட்டைத் துடைப்பது கையாலே - மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே;
வேட்டை யடிப்பது வில்லாலே - அம்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.
3. காற்றை யடைப்பது மனதாலே - இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சொற்றைப் புசிப்பது வாயாலே - உயிர்
துணி வுறுவது தாயாலே.
( தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]