For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
அண்ணனுக்குத் திறல்வீமன் வணங்கி நின்றான்
அப்போது விகர்ணனெழுந் தவைமுன் சொல்வான்
பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
பேச்சதனை நான்கொள்ளேன், பெண்டிர் தம்மை
எண்ணமதில் விலங்கெனவே கணவரெண்ணி
ஏதெனி லுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன்.
வண்ணமுயர் வேதநெறி மாறிப் பின்னாள்
வழங்குவதிந் நெறி என்றான், வழுவே சொன்னான். (80)
எந்தையர்தாம் மனைவியரை விற்பதுண்டோ?
இதுகாறும் அரசியரைச் சூதிற் தோற்ற
விந்தையை நீர் கேட்டதுண்டோ? விலைமாதர்க்கு
விதித்ததையே பிற்கால நீதிக்காரர்
சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்திவிட்டார்!
சொல்லளவே தானாலும் வழக்கந் தன்னில்
இந்தவிதஞ் செய்வதில்லை சூதர் வீட்டில்
ஏவற்பெண் பணயமில்லை என்றுங் கேட்டோம். (81)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]