பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
தன்னையிவன் இழந்தடிமை யான- பின்னர்த்
தாரமெது? வீடேது? தாத னான்
பின்னையுமோர் உடைமை உண்டோ? என்று நம்மைப்
பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்,
மன்னர்களே! களிப்பதுதான் சூதென்றாலும்
மனுநீதி துறந்திங்கே வலிய பாவந்
தன்னைஇரு விழிபார்க்க வாய்ரே சீரோ?
தாந்தனே, நீதிஇது தகுமோ, என்றான். (82)
இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார் ;
எழுந்திட்டார் சிலவேந்தர் ; இரைச்ச லிட்டார் ;
ஒவ்வாது சகுனி செயுங் கொடுமை என்பார் ;
ஒருநாளும் உலகிதனை மறக்கா தென்பார் ;
எவ்வாறு புகைந்காலும் புகைந்து போவீர் ;
ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா.
செல்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச்
செருக்களத்தே தீருமடா பழியிஃதென்பார். (83)
(தொடரும்)












Click it and Unblock the Notifications