பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
திக்குக்கு லுங்கிடவே - எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல் லாம்
தக்குத்தக் கென்றே அவர் - குதித்தாடுவார்
தம்மிரு தோள் கொட்டு வார்
ஒக்குத் தருமனுக்கே - இஃதென்பார், ஓ!
ஓ! வென் றிரைந்திடு வார்;
கக்க்ககென் றேநகைப் பார் -துரியோதனா
கட்டிக்கொள் எம்மை என்பார். (43)
மாமனைத் தூக்கா யென் பார் - அந்த மாமன் மேல்
மாலை பலவீசு வார்.
சேமத் திரவியங்கள் - பல நாடுகள்
சேர்த்ததி லொன்று மில்லை
காமத் திரவிய மாம் - இந்தப் பெண்ணையும்
கைவச மாகச் செய் தான்
மாமனொர் தெய்வ மென்பார் - துரியோதனன்
வாழ்க வென் றார்த்திடு வார். (44)(அடுத்தது துகிலுரிதற் சருக்கம்)












Click it and Unblock the Notifications