For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
விகருணன் சொல்லைக் கேட்டு
வில்லிசைக் கர்ணன் சொல்வான் -
தகுமடா, சிறியாய் நின்சொல்,
தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றன் றெண்ணி
வாய்புதைத் திருந்தார்,நீதான்
மிகுமுரை சொல்லி விட்டாய்,
விரகிலாய்! புலனு மில்லாய்! (84)
பெண்ணிவள் தூண்ட லெண்ணிப்
பசுமையால் பிதற்று கின்றாய்,
எண்ணிலா துரைக்கலுற்றாய் ;
இவளை நாம் வென்ற தாலே
நண்ணிடும் பாவ மென்றாய்,
நாணிலாய்! பொறையு மில்லாய்!
கண்ணிய நிலைமை யோராய்!
நீதிநீ காண்பதுண்டோ? (85)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]