For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
19. அன்பு செய்தல்
இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஒளடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? (1)
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமன்றே?
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஒளடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? (1)
(வேறு)
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமன்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என்மதத்தைக் கைக் கொண்மின் ; பாடுபடல்வேண்டா ;
ஊனுடலை வருத்தாதீர் ; உணவியற்கை கொடுக்கும் ;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்! (2)
( தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]