பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை என நினைத்தீரோ?
யார்பி றந்தது தொட்டின்று மட்டும்
பல பலப் பல பற்பல கோடி
கார்பி றக்கும் மழைத்துளி போலே
கண்ட மக்களனைவருள் ளேயும்
நீர்பி றப்பதன் முன்பு மடமை
நீசத் தன்மை இருந்தன வன்றோ (180)
பொய்யொ ழுத்தை அறமென்று கொண்டும்
பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும்
ஐயகோ, தங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி
நூல்வகை பல தேர்ந்து தெளிந்தோன்
மெய்யறிந்தவர் தம்மு ளுயர்ந்தோன்
விதியினாஸத் தருமனும் வீழ்ந்தான். (181)
மதியி னும்விதி தான் பெரி தன்றோ?
வைய மீதுள வாக மவற்றுள்
விதியினும் பெரி தோர்பொருளுண்டோ?
மேலை நாம் செயுங் கர்மமல் லாதே.
நதியி லுள்ள சிறுகுழி தன்னில்
நான்கு திக்கி லிருந்தும் பன்மாசுபதியுமாறு பிறர்செயுங் கர்மப்
பயனும் நம்மை அடைவதுண் டன்றோ? (182)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications