பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
நின்று துரியோதனன் - அந்த மாமனை
நெஞ்சொடு சேரக் கட்டி,
என் துயர் தீர்த்தாயடா! - உயிர் மாமனே!
ஏளனந் தீர்த்து விட்டாய்.
அன்று நகைத்தாளடா! - உயிர் மாமனே!
அவளைஎன் ஆளாக்கினாய்
என்றும் மறவே னடா! - உ.யிர் மாமனே!
என்ன கைம்மாறு செய்வேன்? (45)
ஆசை தணித்தாயடா!- உ.யிர் மாமனே!
ஆவியைக் காத்தா யடா!
பூசை புரிவோ மடா!- உயிர் மாமனே!
பொங்க லுனக்கிடு வோம்!
நாசமடைந் தடா ! - நெடு நாட் பகை,
நாமினி வாழ்ந்தோ மடா!
பேசவுந் தோன்று தில்லை - உயிர் மாமனே!
பேரின்பங் கூட்டிவிட் டாய் (46)
எஎன்று பல சொல்லு வான் -துரியோ தனன்
எண்ணி எண்ணிக் குதிப்பான்;
குன்று குதிப்பது போல் - துரியோ தனன்
கொட்டிக் குதித்தாடு வான்
மன்று குழப்பமுற்றே - அவர் யாவரும்
வகைதொகை யொன்று மின்றி
அன்று புரிந்ததெல்லாம் - என்றன் பாட்டிலே
ஆக்கல் எளிதாகுமோ? (47)(அடுத்தது துகிலுரிதற் சருக்கம்)












Click it and Unblock the Notifications