பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
அந்திப் பொழுது
(தொடர்ச்சி)
காதலி னாலுயிர் தோன்றும் : - இங்கு
காதலி னாலியிர் வீரத்திலேறும் :
காதலி னாலறி வெய்தும் - இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலி னாலவள் கையைப் பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன் : - அவள்
வீணைக் குரலிலோர் பாட்டிசைத் திட்டாள் . (4)
காதலியின் பாட்டு
கோலமிட்டு விளக்கினை யேற்றிக்
கூடிநின்று பராசக்தி முன்னே
ஓலமிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்:
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்.
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழிதிடல் வேண்டும்.
காத லென்பதொர் கோயிலின் கண்ணே. (5)
(தொடரும்)












Click it and Unblock the Notifications