பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மாயர் சூதினுக்கே - ஐயன் மன மிணங்கி விட்டான்
தாய முருட்ட லானார் - அங்கே சகுனி ஆர்ப்ப ரித்தான் !
நேய முற்ற விதுரன் - போலே நெறியு ளோர்க ளெல்லாம்
வாயை மூடி விட்டார்- தங்கள் மதி மயங்கி விட்டார். (183)
அந்த வேளை யதனில் - ஐவர்க் கதிபர் இஃதுரைப்பான்:
பந்தயங்கள் சொல்வாய் - சகுனி பரபரத் திடாதே:
வந்தெ திர்த்து விட்டாய்: - எதிரே வைக்க நிதிய முண்டோ (184)
தருமன் வார்த்தை கேட்டே - துரியோ தன னெழுந்து சொல்வான்
அருமையான செல்வம் - என்பால் அளவி லாத துண்டு:
ஒரு மடங்கு வைத்தால் - எதிரே ஒன்ப தாக வைப்பேன்:
பெருமை சொல்ல வேண்டா, -ஐயா! பின் னடக்கு கென்றான். (185)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications