For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
நிலாவும் வான்மீனும் காற்றும்
பன்றியைப் போலிங்கு மண்ணிடைச் சேற்றிலே ஓட
படுத்துப் புரளாதே,
வென்றியை நாடியில் வானத்தில் ஓட
விரும்பி விரைந்திடுமே:
முன்றிலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று
நன்று திரியும்வி மானத்தைப் போலொரு
நல்ல மனம் படைத்தோம். (3)
படுத்துப் புரளாதே,
வென்றியை நாடியில் வானத்தில் ஓட
விரும்பி விரைந்திடுமே:
முன்றிலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று
நன்று திரியும்வி மானத்தைப் போலொரு
நல்ல மனம் படைத்தோம். (3)
தென்னையின் கீற்றுச் சலசல வென்றிடா
செய்துவருங் காற்றே!
உன்னைக் குதிரை கொண்டேறித் திரியுமோர்
உள்ளம் படைத்து விட்டோம்.
சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு
சேர்ந்திடி நற்காற்றே!
மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமில்
வெட்டொலி யேன் கொணர்ந்தாய்? (4)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]